கவியரங்க அவை வணக்கம்


சந்தவசந்தம் குழுமத்தில் நான் ஒரு கவியரங்கக் கவிதை பாடும்முன் நான் தந்த அவை வணக்கங்கள் இரண்டு


வைய அவைக்குயென் வணக்கம் - நான்
பையப் பழகிவரும் கவிஞன்
மெய்யும் பொய்யுமே கவிதை - அதைச்
செய்யக் கிடைத்ததே பெருமை

சந்த வசந்தமென் சொந்தம் - மனம்
உந்த உயிர்க்கவிப் பந்தம்
இந்த வானமே போதும் - இனி
எந்த மேகமும் பொழியும்

*

விற்பனர்க்கும் அற்புதமாய்
விண்நிறைந்த கற்பகமாய்
உயிர்பெருக்கும் தமிழுக்கென்
முதல் வணக்கம்

சொற்குவித்துப் பொன்முகட்டில்
கவிக்கொடிகள் பறக்கவிடும்
கவியரங்கத் தலைவர்க்கென்
தனி வணக்கம்

சுற்றமெனச் சூழ்ந்துகொண்டு
சந்தவிரல் கைகுலுக்கும்
வயதேறா வசந்தங்களே
அவை வணக்கம்

No comments: