பல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி


பல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி அவர்கள் தலைவராய் இருந்த ஒரு கவியரங்கத்தில் கவிதைபாட என்னை அவர் அழைத்தார். நான் அவருக்கு ஒரு வாழ்த்துப்பா பாடினேன்.



பட்டு மிளிர்கின்ற
விழிமணி - உயிர்
தொட்டு அணைகின்ற
கவிமணி

இட்டு நிறைகின்ற
புகழ்மணி - பனி
கொட்டும் கனேடியத்
தமிழ்மணி

மெட்டுக் கவிபாடும்
குரல்மணி - நிறம்
சொட்டித் தாளேறும்
விரல்மணி

எட்டுத் திசைவெல்லும்
நவமணி - கலை
விட்டு விலகாத
தவமணி

அன்புடன் புகாரி

*

ஆரெஸ்மணி அவர்கள் என்னை அழைத்தது

மதவெறி அறியா நல்ல இதயம்
துடிக்கும் மார்பைக் கொண்ட மனிதர்
இறைவனை எதிலும் காணும் சித்தர்
தோன்றுவதெல்லாம் மறைவதனாலே
மாற்றம் ஒன்றே நிலையென்றுணர்ந்து
மாற்றமே இறையெனும் சிந்தனையாளர்

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி

1 comment:

சேதுக்கரசி said...

மணி அண்ணனுக்கு இனிய அறிமுகம் இது.