நீதி கேட்டு ஓர் அநீதி


ஒரு பெண் சிசுவைக் கொல்ல
தாயெனும் பெண்
நாத்தனாரெனும் பெண்
மாமியாரெனும் பெண்
மருத்துவச்சியெனும் பெண்

அடடா
தங்களைத் தாங்களே
அழித்துக்கொள்ள
எப்படித் துணிந்தார்கள்
ஏன் இந்தத் தற்கொலை

இரக்கத்தின் சிகரங்கள்
ஏன் தங்கள்மேல்
இரக்கம் காட்ட மறந்தன

பெண்ணுரிமைக்குப் போராடும்
அகிம்சைப் புரட்சியில்
தங்களையே
பலியிட்டிக் கொள்ளும்
அவலமோ இது

No comments: