பல்லாயிரம் வெட்டுக்கிளிகள்
தத்தித் துள்ளும் நெஞ்சோடு
தேடிப் பிடித்த திருப்தியும்
நம்மோடு உள் நுழைய
எப்போதும் இல்லாத
சாகாக் காதல் வாசனையால்
குப்பென்று பூத்தது அந்த உணவகம்

ஓடிவந்த பணியாளிடம்
கேளடி எதுவாகினும் என்றே கூறி
உன் கழுத்துக்குள் புதைந்தேன்

வரவழைத்த உணவைத்தான்
உண்டேனா அல்லது
உன் தீம்பலா வாயசைவுக்கேற்ப
பட்டு வார்த்தைகள் இட்டு
குட்டிக் கவிதைகள் பலநூறு
வடித்தேனா என்று இன்றும் அறியாமல்
ஏதோ மாயத்தில் சிக்கிக்கிடக்கிறேன்

2 comments:

vasu balaji said...

/எப்போதும் இல்லாத
சாகாக் காதல் வாசனையால்
குப்பென்று பூத்தது அந்த உணவகம்/

காதல் மணக்கிறது:)

பூங்குழலி said...

உன் தீம்பலா வாயசைவுக்கேற்ப
பட்டு வார்த்தைகள் இட்டு
குட்டிக் கவிதைகள் பலநூறு
வடித்தேனா என்று இன்றும் அறியாமல்
ஏதோ மாயத்தில் சிக்கிக்கிடக்கிறேன்

அழகு