உன் குரலவிழ்க்கும் சொல்மொட்டுகள்
என் இதயத்தை இழுத்துவைத்து
இச்சுக்களிடம் பூக்கள்

மூர்ச்சையான மனதின் முகத்தில்
சலக்கென்று விழும் பன்னீர்த் துளிகள்

திமுதிமுவென பற்றியெரியும் நெஞ்சில்
பனிப்பூ பூக்கவைகும் வித்தைகள்

கைகளைச் சிறகுகளாக்கி
மேலெழுந்து திரியச்செய்யும் மந்திரங்கள்

போதுமென்று முற்றுப்புள்ளி
வைக்க முடியாத தொடர்கதைகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

N Suresh said...

//போதுமென்று முற்றுப்புள்ளி
வைக்க முடியாத தொடர்கதைகள்//

அருமை!!

வாழ்த்துக்களுடன்
என் சுரேஷ்