உன்
நெருப்பை
என்
உயிர்த் திரியில்
ஏற்றிய
உணர்வுத் தீபம்
நீ

மனக் காற்றில்
எத்தனை ஆடினாலும்
என்
திரிவிட்டு விலகாத
தீஞ்சுடர்
நீ

4 comments:

புன்னகையரசன் said...

தீயென ஒரு கவிதை ஆசான்.... மனது குளிர...


வாழ்த்துக்கள்...

செல்வன் said...

தீஞ்சுடர் வந்தபின்னும் மனகாற்று ஏன் ஆடணும்?:-)

நல்லாருக்கு கவிதை

சீனா said...

அன்பின் புகாரி


காதலி தீபமாய் வாழ்வினில் விளக்கேற்ற வருகிறாள்
அணையாத தூங்கா விளக்காய் - தூண்டா மணி விளக்காய் - நந்தா விளக்காய் ஒளி பரப்ப - உற்ற துணையாய் இருப்பவள் அவளே

நல்வாழ்த்துகள் புகாரி


நட்புடன் சீனா

vasu balaji said...

மனக் காற்றில்
எத்தனை ஆடினாலும்
என்
திரிவிட்டு விலகாத
தீஞ்சுடர்
நீ

ஆஹா ஆஹா.