நீ
வந்ததும்
ஆளரவமற்றுக்கிடந்த
என் வீதிகளில்
புயலடிக்கத் தொடங்கியது

என்
காய்ந்த
மரப்பட்டைகளும்
பூக்களாய் மாறி
பல வண்ணங்களில்
குலுங்கிச் சிலிர்த்தன

நீ
சென்றுவிட்டாய்

புயல்
ஓய்ந்துபோய்விட்டது

ஆனால்
தீச்சுனாமியல்லவா
வந்துவிட்டது

என் உயிர் வேர்கள்
அத்தனையும்
கருகிச் செத்துவிட்டன

நீ ஏன் வந்தாய்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

vasu balaji said...

/என் நடு
உயிர் வேர்களும்
கருகியல்லவா போய்விட்டன/
ம்ம்