எந்த இக்கட்டில்
நீ எங்கு ஓடினாலும்
குட்டியையும்
பையில் இட்டுக்கொண்டு
ஓடும்
கங்காருவைப்போல
என் சகலத்தையும்
வாரி அள்ளிக்கொண்டு
நீ ஓடுகிறாய்

நில்
நான் தான்
நீயாகவே இருக்கிறேனே?

2 comments:

N Suresh said...

இதை ஒரு உரைநடை என்று உங்கள் மீது விமர்சனத்தை நான் அல்ல, இன்னொருவர் வீசினால், உங்கள் பதில் என்ன?

Unknown said...

கவிதையா உரைநடையா என்பதெல்லாம் வாசிக்கும் உங்கள் உள்ளத்தில் இருக்கிறது என்பேன் சுரேஷ்!

உங்களின் தொடர் பின்னூட்டங்களுக்கு என் நன்றிகள்.