வாழ்வின் புள்ளியே கோலமே


உன்
சாலையில் நடக்கிறேன்
உன்
குழிகளில் விழுகிறேன்

நீ தரும்
கண்ணீரைக் கொட்டுகிறேன்
ஒருநாள்
மூச்சழிந்து முடியப்போகிறேன்

கதறியே அழுதாலும்
நீயே அல்லாது
வேறு எவராலும் எதற்கும்
தீர்வு சொல்ல இயலாது

காலமே காலமே
வாழ்வின்
புள்ளியே கோலமே

1 comment:

N Suresh said...

காலனையும் காலம் தான் நிர்ணையிக்கிறதா அல்லது படைத்த இறைவனா?

கடந்த காலம் இனி நம்மை கடந்து போகாது...