* * * *

நாவில்
உன் பெயரணிந்தேன்
என் சுவைகளெல்லாம்
மாறிப்போச்சு

விழியில்
உன் நினைவணிந்தேன்
என் கனவுகளெல்லாம்
பிரபஞ்சமாய் விரிஞ்சுபோச்சு

உயிரில்
உன் உணர்வணிந்தேன்
என் கவிதைகளெல்லாம்
எனை அள்ளிக்கொண்டு
இணைய வெளியெங்கும்
பரந்துபோச்சு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

vasu balaji said...

அய்யோ ரொம்ப பிரமாதம்.

Unknown said...

நன்றி வானம்பாடிகளின் பாராட்டுப் பாடலுக்கு