பொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை

1.தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா பெரியப்பா பேரன் பேத்தி மாமா மச்சான் என்று ஒருவர் பாக்கியில்லாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பம். இது இப்போதும் சில இந்தியக் குடும்பங்களில் உண்டு. சண்டைகள் குறைவில்லாமல் நடக்கும். எவரும் தனித்துவம் கொண்டு வாழ்வது மிகக்கடினம்.

2. அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்பம். தம்பிகளும் அக்கா தங்கைகளும் தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். இது இந்தியாவில் பரவாலாக உள்ள கூட்டுக் குடும்ப நிலை இப்போது. இதில் சேமிப்பு அதிகம். அன்பு பாசம் அதிகம். உறவு நலம் அதிகம்.

3. கணவன், மனைவி, திருமணமாகாத பிள்ளைகளைக் கொண்ட குடும்பம். இது உலக அளவில் பிரசித்தம். எங்கும் காணக்கிடைக்கும் அமெரிக்காவையும் சேர்த்து. பெற்றோர் முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிடவேண்டும். பெற்றோரை தனித்துவிடும் அவலம் தவிர மற்றதெல்லாம் நலம்தான்.

4. ஆணும் பெண்ணும் தனியானவர்கள். Singles. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகள் தொல்லைகள் என்று தவிர்ப்பார்கள். பந்தம் இல்லை சொந்தம் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள். எந்தப் பொறுப்பும் இல்லை எந்த இழப்பும் இல்லை.

இதில் எந்த வகைக்கு உங்கள் வாக்கு? ஏன்?

2 comments:

Anonymous said...

அத்தனையும் அருமையானவை

nowshathali

S/o Mohamed ali
Nidur

mohamedali jinnah said...

கொள்ளை அழகு