02

யாரோடு பேசினாலும்
அது என் மொழியாய் இல்லை
எவரோடு சிரித்தாலும்
அது என் மகிழ்ச்சியாய் இல்லை

என்னை எனக்குத்
திருப்பித் தந்துவிடாதே
வினோதமாய் இருந்தாலும்
இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

7 comments:

சீதாம்மா said...

இதயப் பறிமாற்றம்
இயல்பை அழித்துவிட்டு
ஏதேதோ புலமப வைக்கின்றது

காந்தி said...

புது சீரீஸ் (series) கவிதைகளா, புகாரி....!

அற்புதமா இருக்கு!

குட்டி குட்டி கவிதைகளை விரும்பும்
~காந்தி~ :-)

பூங்குழலி said...

என்னை எனக்குத்
திருப்பிப் தந்துவிடாதே
வினோதமாய் இருந்தாலும்
இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது

காதல் மயக்கம் தான்

சீனா said...

பிடித்தது நடக்கிறது புகாரி

கவிதை அருமை கருத்து அருமை

நட்புடன் ..... சீனா
------------------------------

விஷ்ணு said...

வினோதம் தான் ..ஆனால் பிடித்திருக்கிறதே ...

கவிதை மிக அருமை புகாரி அவர்களே ....

விஷ்ணு ...

ஆயிஷா said...

இது தானே காதல் ஆசான். பிடித்திருக்கிறது எனக்கும் உங்க கவிதை.
அன்புடன் ஆயிஷா

தஞ்சை மீரான் said...

உண்மையான காதலில், இது நிஜம்.