03

உன்னைக் கலந்த
சிறு பொழுதும்
அதற்கென தவித்திருந்த
தனித்த
முன் பொழுதும்
கலந்த நினைவுகளால்
தொடர்ந்து காணாமல் போகும்
மிகப்பெரும் பிற்பொழுதும்
நானெனப்படும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

7 comments:

சீதாம்மா said...

காணாமல் போனானா
கரைந்துவிட்டானா

காந்தி said...

அசத்தீட்டிங்க....!

விஷ்ணு said...

நல்ல கவிதை புகாரி அவர்களே ..
எப்பொழுதும்
நானெனப்படுவது யாதெனில் -
காதலிக்கிறேன் உன்னை ....

பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன்
விஷ்ணு ..

பூங்குழலி said...

சூப்பர்

சீனா said...

தவித்த முன் பொழுது

கலந்த சிறு பொழுது

நினைவுகள் நிறைந்த பிற்பொழுது

முக்காலமும் நிறைந்தது தான் நான் எனப்படும் - சிந்தனை அருமை புகாரி

நட்புடன் ..... சீனா
--------------------------------

ஆயிஷா said...

சுகமான சுமைகள் இல்லையா ஆசான்.
அருமை கவிதை.
அன்புடன் ஆயிஷா

ஆயிஷா said...

சுகமான சுமைகள் இல்லையா ஆசான்.
அருமை கவிதை.
அன்புடன் ஆயிஷா