*****
04

ஆகாயத்தில்
சில நட்சத்திரங்கள்
தொலைந்து போகலாம்

ஆகாயமே
தொலைந்துபோகும்
நிகழ்வுதான்
காதல்

*காதலிக்கிறேன் உன்னை எப்போதும்*

அன்புடன் புகாரி

10 comments:

சீனா said...

காதல் வந்து விட்டால் எல்லாம் காணாமல் போய் விடும் - உண்மை தான்

நல்லாருக்கு கவிதை

Riyaz Ahamed said...

buhari bhai aarumai

வேந்தன் said...

தொலையாது பூமியாவது மிஞ்சுமா கவிஞ்ரே?

சீதாம்மா said...

காதலில் இழப்புகள் அதிகமோ

சாந்தி said...

மெய் (உண்மை) மறப்பதுதான் காதலா?

Unknown said...

காதலொன்றே உண்மை மற்றதெல்லாம் பொய் என்று கொள்ளும் மகா மயக்கம் காதல்.

உன்மெய் என்மெய் மறந்து
நம்மெய் என்ற பன்மையும் மறந்து
ஒருமை என்று பொய்மையாய் ஆவது
காதல்

அன்புடன் புகாரி

பூங்குழலி said...

காதல் வந்து விட்டால் எல்லாம் காணாமல் போய் விடும் - உண்மை தான்


காதலுக்கு விதவிதமாக சாயல் கொடுத்துப் பார்க்கிறீர்கள் .அழகாக இருக்கிறது

தஞ்சை மீரான் said...

சுருக்கமான நச் என்ற கவிதை.

ஆகாயத்தில் பறக்கும் பொழுது, பூமியை மறக்கச் செய்யும் காதல்.
பூமியில் இருக்கும் பொழுது, ஆகாயத்தை தொலைக்கும் காதல்.

காதல் என்ற வார்த்தை தமிழ் மொழியில் எப்படி வந்திருக்கும்?

கவிஞர்களுக்கு காதலி இருப்பார்களோ அல்லது இல்லையோ.....
ஆனால், கவிஞர்களிடமே காதல் பசுமையாய் வாழ்கிறது / வளர்கிறது.

ஆயிஷா said...

>>>தொலையாது பூமியாவது மிஞ்சுமா கவிஞ்ரே?

>>>குத்துப் பாட்டுக்காக அதைமட்டும் விட்டுவெச்சுறுவோமுள்ள :)))))

”அப்படிப்போடு போடு போடு போடு”


அப்படிப் போடுங்க கவிஞரே.
கவிக்குக் கவி......அடிக்கு அடி......
அசத்திட்டீங்க.
அன்புடன் ஆயிஷா

சக்தி said...

அன்பு நண்பரே புகாரி,

காதல் என்னும் நிகழ்வை அந்தக் காதலே வியக்கும் வகையில்
விபரித்துள்ள்ளீர்களே ! அற்புதம்

அன்புடன்
சக்தி