24

வந்தமர்வதற்கு மட்டுமல்ல சிறகுகள்
படபடத்து மறைந்து போவதற்கும் என்பதை ஏற்க
வேரில் தீயிட்டுக் கொண்டாலும் இயலுவதில்லை

சிறு மஞ்சள் பூவொன்று ஒருதுளி விழிசிந்த
மேலும் ஈரம் மிகுத்து கரும் பச்சையாகி
வர்ணங்கள் பீச்சும் வானவில் ஆரமாகி

என் உள்வெளிகள் ஈரமானவை
எந்த வெயில் பட்டும் காய்வதில்லை

வெளியேறிய அலகின் நினைவுகள் கூடழிக்க
மீள்வரவு கேட்டு மன்றாடி மேலும் ஈரம் நிரம்பி

என் உள்வெளிகள் ஈரமானவை
எந்த வெயில் பட்டும் காய்வதில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

பூங்குழலி said...

சிறு மஞ்சள் பூவொன்று ஒருதுளி விழிசிந்த
மேலும் ஈரம் மிகுத்து கரும் பச்சையாகி
வர்ணங்கள் பீச்சும் வானவில் ஆரமாகி


அழகான வரிகள்