27

அன்றொருநாள் நானுன்னைத்
தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த
கோடி மொட்டுகள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின்
மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது
நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள்
மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட
மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும்
புரியாமல் விழித்திருக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

சிவா said...

அழகான கவிதை ஆசான் .. படம் மிகவும் அருமை