40

உன் இதழ்களில்
புன்னகை கௌரவிக்கப்படுகிறது
உன் புருவங்களில்
அழகு ஆசிர்வதிக்கப்படுகிறது
உன் கன்னங்களில்
மென்மை ஆராதிக்கப்படுகிறது

அதோ பார்
உன் நெற்றி விழுந்து
வழியும் சுகம்கண்டுவிட்ட
அந்த மழைத்துளிகள்
மீண்டும்
மழைத்துளிகளாகவே பிறக்க
முகிலிடம்
மனுப்போட்டுக்கொண்டு
ஆவியாகின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: