05

கரையா நெடு இரவு முழுவதும்
மூச்சுமுட்ட உன்னை நினைத்துக்
கரைந்துவிட்டுத்தானே உறங்கப்போனேன்

கண்விழிக்கும் முன்பே
இமை தட்டித் திறவாமல்
இதயம் நுழைந்து
நினைவுகளை எழுப்பிவிட்டு
அது
கைக்குழந்தையாய்
மலங்க மலங்க விழிக்க
இப்படிக் கைதட்டிச் சிரித்தால்
எப்படி

என் பல்துலக்கும் முன்பே
உனக்கு நான் தேநீர் ஆகிறேன்

நீ
பருகப்பருக
நிரம்பி வழிகிறது
என் காதல் கோப்பை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

பூங்குழலி said...

கண்விழிக்கும் முன்பே
இமை தட்டித் திறவாமல்
இதயம் நுழைந்து
நினைவுகளை எழுப்பிவிட்டு
அது கைக்குழந்தையாய் மலங்க மலங்க விழிக்க
இப்படிக் கைதட்டிச் சிரித்தால் எப்படி

கலக்கல்

இஸ்மாயில் said...

பின்னூட்டம் போடா வார்த்தைகள் இல்லை...

போங்கப்பா... நான் லவ் பண்ண போறேன்...