06

முதல் முத்தத்தால்
மூச்சுக் குழாய்களும்
தங்கமுலாம் பூசிக்கொண்ட
அந்த சிலிர்ப்பு நாளில்
எல்லாமுமாய் ஒருவர்
எப்படித்தான் இருப்பதென்றாய்

பின்னெல்லாம்
ஒவ்வொரு தருணத்திலும்
தாயாய் மகளாய் தோழியாய்
என்று நொடிதோறும் மாறும்
உன் பரிமாற்றங்களில்
நீயே ஆகிவிட்டாய்
எனக்கு எல்லாமுமாய்

யாதுமாகி நிறையாது
காதலில்லை என்று
அறிந்தனையோ கிளியே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - புரிதல் உணர்வு அதிகமானால் - மூன்றாம் முத்தமென்ன - முதல் முத்தத்திலேயே எல்லாமும் ஆகிவிடலாம் புகாரி

ஒவ்வொரு வரிகளும் அனுபவைத்து எழுதப்பட்ட வரிகள்

நன்று நன்று நல்வாழ்த்துகள் புகாரி