தமிழ்முஸ்லிம் மகளிர்தின வாழ்த்துக்கள்


பெண்ணுக்குப்
படிப்பெதற்கு என்றார்கள்

………..தாய் போராடினாள்

வேறுவழியின்றி
மார்க்கக் கல்விமட்டும்
போதுமென்றார்கள்

………..சகோதரன் போராடினான்

சம்மதித்து
ஐந்தாம் வகுப்புவரை என்றால்
பரவாயில்லை என்றார்கள்

………..மாற்றுமதத் தோழி போராடினாள்

அப்படியென்றால்
பள்ளி இறுதியோடு
நின்றுவிட வேண்டும் என்றார்கள்

………..தந்தை போராடினார்

அதெல்லாம் ஒருவழியாய்
ஓய்ந்து முடிந்துவிட்டது

எம்.ஏ, எம்.எஸ்.சி, பி.ஹெச்டி
என்றெல்லாம் ஆகிப்போய்விட்டது

இப்போது
பொதுவெளிகளில்
பொழுதுபோக்கு அம்சங்களில்
பெண்கள்மட்டும் எழுதக்கூடாதென்று
ஆரம்பிக்கிறார்கள்

இவர்களும்
ஒருநாள் மாறுவார்கள்

மாறாவிட்டால்
இன்று வளரும்
இளைய பெண்கள்
விட்டுவிடுவார்களா என்ன

தமிழ்முஸ்லிம்
மகளிர் தின வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி

No comments: