அன்புப்பசை

அன்பிலெல்லாம்
உயர்வான அன்பென்பது
யாதெனிலோ

அது
நிராகரிக்கப்பட்டோர்
மீது காட்டும்
பரிசுத்தமான
அன்புதான்

எவருக்குமே விளங்காத
இதயங்களை
நெருங்கி
உண்மை அன்பைப்
பொழியும்போது

எல்லோருக்கும்
புரிந்துபோனவர்களாய்
அவர்கள்
நிறம்மாறிவிடுகிறார்கள்

வாழ்வோம்
தீவிரவாதிகளையும்
அன்புக் காட்டியால்
திசைமாற்றி 

சகிப்போம்
அறியாமைகளையும்
அன்புக் கரங்களால்
அள்ளியெடுத்து

இணைவோம்
பொருந்தாத இடங்களிலும்
அன்புப் பசை
ஒட்டி

No comments: