அரபுநிலப் பிரவேசம்

பசிவந்தால்
பத்தும் பறந்துபோகும்

அப்படி ஒரு பசி
எனக்கும் வந்தது

மனக்குரல்
காலடியில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்து நான்
அவசரமாய் நடந்தேன்

எதிரே
நரிவர நரியானேன்

நான்வர
குரைத்தேன்

இன்று என்னிடம்
பசியும் இல்லை
நானும் இல்லை

No comments: