எழுது
எழுத்து ஒரு தவம்
எழுத்து ஒரு யுகம்
எழுத்து ஒரு வானம்
எழுத்து ஒரு சூரியன்

எழுது

எழுத்து ஒரு பண்பாடு
எழுத்து ஒரு பரிணாமம்
எழுத்து ஒரு எழுச்சி
எழுத்து ஒரு புரட்சி

எழுது


இன்னும் இன்னும்
எழுத்துதான் எல்லாமும்

எழுது


எழுத்துக்குமுன்
இயலாததென்று எதுவுமில்லை

எழுது


எழுதியதை நேசிக்க
பலகோடி உயிர்கள் உண்டு

எழுது





எழுதியதை
நஞ்சு நெஞ்சோடு கீற
ஒன்றிரண்டு
தேள்களும் உண்டு
ஆனபோதிலும்

எழுது


கொடுந் தேள்களால்
மட்டுமே ஆனதல்ல
எழுத்துலகம்

எழுது


தேடித்தேடி
வாசித்து வாசித்து
நேசித்து நேசித்து
உருகிப் பல்கிப்பெருகும்
நேச நெஞ்சக்
கடல்களால் ஆனதே
எழுத்துலகம்

எழுது

No comments: