கவிதை உயிர்


கவிதை உயிர்





உயிரிழைகள்
ஒவ்வொன்றும்
வர்ணங்களாய்ப்
பிரிய

உணர்வுகளின்
உந்துதலால்
தூரிகையில்
வழிய

காகிதத்தில்
கதகதப்பாய்
பிறக்கிறது
கவிதை உயிர்

1 comment:

cheena (சீனா) said...

உயிர்கள் - உயிரிழைகள் - உணர்வின் உந்துதலால் மட்டுமே கதகதப்பாய் பிறக்கமுடியும். கருத்துகள் அருமை