கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 1

சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரியை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன்.

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

2005ல் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து வழங்கிய வாழ்த்துரை கண்டேன் - கேட்டேன்

மகிழ்ச்சி

தாயினைப் பாராட்டிக் கவிதை வாசித்த பொழுது - அத்தாயின் கடைவிழியில் எட்டிப்பார்த்த கண்ணீர் - அதுதான் புகாரி தன் வாழ்வினில் பெற்ற மிகப் பெரிய கவுரவம்

அயலகம் சென்று வேர் விட்ட புகாரியின் தொப்புள் கொடி அறுந்து விடாமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விழா - நூல் வெளியீட்டு விழா

புகாரிக்கு கவிதை எழுதும் மனது இருக்கிறது - அது தான் கவிஞனை உருவாக்கும்.

கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம் - சொற்களின் அறிமுகம் சந்தங்களின் அறிமுகம் - பயிற்சி - கேட்டல் - கற்றல் - உணர்தல் இவை இருந்தால் கவிஞனாகி விடலாம்.

தமிழைத் தொழிலாகக் கொண்டவன் எழுதும் கவிதையை விட தமிழைப் பொழுது போக்காக எழுதும் கவிதை சிறந்தது

புகாரி கவிதையை - தமிழை நேசிக்கிறார் - காதலிக்கிறார் - மயங்குகிறார்

அருமையான வாழ்த்துரை - காணொளி அருமை - ரசித்துக் கேட்டேன் - மறுபடியும் கேட்டேன்.

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

அன்புடன் மலிக்கா said...

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு.

பார்த்தேன் ரசித்தேன் பிரமித்தேன்
அதில் அன்னையின் பாராட்டுவிழாவும் சேர்ந்த்து மிக அருமை.

சாதனை மனிதன் சாதாரனமாய் இருப்பது அரிது.

பெரிய மனிதரை மனமார பாராட்டும் இந்த சின்னஞ்சிறிய சிறுமி.

வாழ்த்துக்கள் இன்னும் பலபல வெற்றிகள் கண்டு முன்னேற வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா

ஜோதிஜி said...

பாரதி பற்றி உங்கள் வரிகள் முற்றிலும் பொருத்தம். தமிழர் திருநாள் வாழ்த்துகள்.