அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் தமிழ்ச் சொற்களா?
இந்த மயக்கம் பலருக்கும் இருக்கிறது!
அஹர முதஸ எஸுத்தெல்லாம் ஆடி பஹவன் முடற்றே உஷஹு
என்று எழுதினால்தானே கொதிக்க வேண்டும் தமிழன்?
தமிழைத் தமிழாகவே எழுதுகிறவனிடம் தனித்தமிழ் என்று லூட்டி அடிக்க (இலூட்டி ) வருவது அழகா?
அயல்மொழிப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதினால் என்ன?
இதற்காக செலவிடும் நேரத்தை என்ன செய்யலாம்?
நான் தமிழ்ப்பற்றாளன் நான் ஒரு நல்ல யோசனை தரட்டுமா?
199 நாடுகளில் தமிழ்ப் பிஞ்சுகள் தமிழே பேசாமல் அழிகின்றன.
அவர்களைக் காக்க ஏதேனும் செய்யுங்கள்.
எங்கள் தமிழ்மொழி என்று ஒரு தொண்டியக்கம் தொடங்கி இருக்கிறேன். அதில் வந்து உறுப்பினர் ஆகுங்கள்.
தனித்தமிழ் என்று தமிழை அழிக்கப்பாடுவது தேவையற்ற ஒன்று.
தமிழே இல்லாமல் அடுத்த தலைமுறை அழிந்து போகிறது என்பதை அறியாத அவலம் கொடுமைங்க தமிழரே.
அன்புடன் புகாரி

No comments: