தமிழன் நன்றாக புதுக்கவிதைகளை இயற்றலாம்.
அதற்காக மரபுக்கவிதைகளை பழிக்கலாகாது.
அதாவது தமிழன் நன்றாகக் கிரந்தம் எழுதலாம், குசுப்பு என்று எழுதுகிறவர்களையும் சானி என்று எழுதுகிறவர்களையும் இடமாசுகசூ என்று எழுதுகிறவர்களையும் பழிக்காமல் இருந்தால் சரி.
அப்படித்தானே?
பழித்தது நானல்ல நண்பரே. ஜெயபாரதன் என்று எழுதாதீர்கள் நீங்கள் தமிழ் இலக்கணம் அறியாத தத்தி செயபாரதன் என்று எழுதுங்கள் என்று பழித்துக் கூறுவது யார்?
அதற்கான பதிலடிகளையே நாங்கள் தருகிறோம்.
கிள்ளிவிட்டவரே தொட்டிலாட்ட வருவதோ?
குஷ்வந்த் சிங் என்று எழுதினால் நீங்கள் தமிழே அறியாதவர், தமிழ் இலக்கணமே தெரியாதவர் ஆகவே குசுவந்த சிங்கு என்று எழுதுங்கள் என்று சொல்வது யார்?
போய் பிழைப்பைப் பாருங்கள் சார், தமிழ் வளரட்டும்.
இளைய தலைமுறையை எப்படித் தமிழில் உரையாட வைப்பது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதுவே ஆக்கப் பூர்வமானது
என் கேள்வி புரியவில்லையா? இந்த தாராளமா படைக்கலாம் என்ற உரிமையை உங்களுக்குத் தந்தது யார்?
தொல்காப்பியனா?
தமிழ் இலக்கணத்தில் எங்கே இருக்கிறது புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனகவிதை எல்லாம்?
தமிழ் இலக்கணத்தில் புதுக்கவிதை ஹைக்கூ கவிதை எல்லாம் இல்லாதபோது, கிரந்தம் மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி ஒவ்வொண்ணா எடுத்துக் கொடுத்து கேட்க வேண்டுமா நான்?
உங்களுக்கே தெரியாதா?
ஆய்வு செய்யமாட்டீர்களா?
கிளிப்பிள்ளையா நீங்கள்?
அன்புடன் புகாரி

No comments: