என் பெயர்
குஷ்வந்த் சிங்
என்றால்
குசுவந்த அசிங்கு
என்று நான்
ஒருக்காலும்
எழுதமாட்டேன்


புகாரி என்பது என் பெயர்

என் பெயர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் அது என் பெயர்.

நான் புஹாரி என்று என் இளவயதில் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் புகாரி என்று எழுதினாலும் ஓசை மாறாது என்று தமிழறிஞர்கள் சொன்னார்கள். அப்படியே கேட்டுக்கொண்டேன். ஏனெனில் என் பெயருக்கு யாதொரு சேதாரம் நிகழவில்லை. மேலும் அழகானது. நன்றிசொல்லி ஏற்றுக்கொண்டேன்

ஆகவே நண்பர்களே என் பெயர் புகாரி. அது அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் அது என் பெயர்.

ஒரு அரபுக் காரன் வருவான் அதை Bokhari என்று எழுதவேண்டும் என்பான். அதுதான் மூலமொழி என்பான்.

ஒரு பெர்சியன் வருவான் அதை Bukaari என்று எழுத வேண்டும் என்பான். இதுதான் உண்மையான மூல மொழி என்பான்.

ஆனால் உலக மக்களே நீங்கள் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். புகாரி என்பது என் பெயர் எனக்கு இரு மொழி தெரியும். தமிழ் + ஆங்கிலம்

தமிழில் புகாரி என்றுதான் எழுதுவேன் ஆங்கிலத்தில் Buhari என்றுதான் எழுதுவேன்.

எவராவது மாற்று கீற்று என்று வந்தால் சோலியப்பாருய்யா வெங்காயம் என்றுதான் அன்பாகச் சொல்வேன் ;-)

நீங்கள் உங்கள் குஷ் பெயரை குசு என்று மாற்றிக்கொள்ளுங்கள் எனக்குக் கவலை இல்லை. என் பெயரை விட்டுவிடுங்கள்.

என் பெயர்
குஷ்வந்த் சிங்
என்றால்
குசுவந்த அசிங்கு
என்று நான்
ஒருக்காலும்
எழுதமாட்டேன்

ஏதாவது புரிகிறதா?

அன்புடன்
கவிஞர் புகாரி

No comments: