நான் நானா

அன்பு நண்பர் மணி வண்ணன்,

உங்கள் கருத்துப்படியே
நான் தமிழ் இலக்கணமே தெரியாதவனாய்
அப்படியே இருந்துவிட்டுப் போகிறேனே


உங்கள் கருத்து என்பது
உங்கள் கருத்து
அது என் கருத்தாகவோ
இந்த உலகக் கருத்தாகவோ
ஆகிவிடுமா?

நான் நானா
அல்லது நீங்கள் சொல்பவனா
என்பதில் சர்ச்சையே தேவையில்லை
என்று தெளிபவன் நான்

யார் யாரை
எப்படிப் பார்க்கிறார்களோ
அப்படித்தான் அவரா
அல்லது அவர் என்பவர்
அவரே அறியாத
மாய மனிதரா

இலக்கியம்
முதலாக வந்தது
இலக்கணம்
பிறகுதான் வந்தது என்று
தெளிவாக அறிந்தவன்
நான்

இன்றைய தமிழுக்கு
அகராதியே போட்டுவிட்டார்கள்.

இன்றல்ல
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்

https://www.jeyamohan.in/4347#.W8N1ZGhKiUk

http://crea.in/pdf/Crea%20Brochure%208pages.pdf

என்னிடம் பழைய
க்ரியா தமிழகராதி
நெடுங்காலமாய் உண்டு

இதோ தமிழில் தட்டச்சிக்கொண்டிருகிறேன்.

என்னால் ஹ ஜ ஸ ஷா என்று
சரளமாகத் தட்டச்ச முடிகிறது

தமிழ்த் தட்டச்சு நிரலிகள்
தாராளமாக அந்தச் சலுகையைத்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
வழங்கியுள்ளன

நீங்கள் சரியான கதவைத்தான்
தட்டுகிறீர்களா என்று
நீங்களே
சிந்தித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
கவிஞர் புகாரி

No comments: