தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்

*தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்*

>>>உங்களின் தாழ்வு மனப்பான்மையும் அடிமைப்போக்கும், மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பது மட்டுந்தான் எனது கவலை. உங்களின் அரைகுறை தமிழறிவுடன் குமுக வழக்கியல் அறிவுக்குறையும் மிகத்தவறாக உங்களை இட்டுச்செல்கிறது. நாக இளங்கோவன் <<<

இப்படியான அநாகரிகம் தமிழ் மரபே இல்லையே?


உங்களால் மட்டுமே இப்படி வசைபாடமுடியும் என்று எண்ணமா?

ஒரு முட்டாள்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு இப்படி வசைபாட வரும் உங்களை தமிழின் முன்னேற்ற வழியில் நிற்கும் நான் எத்தனை வசைபாட முடியும்?

அறிவில்லாத நிலையில் நின்று வசைபாடும் உங்களை அறிவு சார்ந்து வளர்தமிழோடு செல்லும் நான் எத்தனை வசைபாடமுடியும்?

இப்படித்தான் மரபுக் கவிதைதான் கவிதை புதுக்கவிதை கவிதையே அல்ல. நீ தமிழ்க் கவிஞனில்லை என்று தாறுமாக எழுதி வந்தீர்கள் கூட்டம் கூட்டமாக.

உங்கள் மூக்கையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டுவிட்டு புதுக்கவிதை வானலாவி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது

அதையும் தாண்டி நவீனம் பின் நவீனம் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள் முன்னேற்ற வளர் தமிழ்ப் பற்றாளர்கள்.

பாலடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக்கொண்டிருக்கும்
வவ்வால்கள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
நான் தலைகீழாய் நடக்கிறேனாம்

இதை எப்போதோ எழுதிவிட்டேன் இக்கவிதையை, புதுக்க்க்க்க்க் கவிதையை!

நிறுத்துங்கள் உங்கள் பிதற்றல்களை
நிறுத்தாவிட்டால் நானும் உங்களைப் போலவே தரமிழந்து வாய்மொழி உதிர்க்க வேண்டியதாக இருக்கும்

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து என் பணி செய்வேன்
நில்லேன் அஞ்சேன் என்றான் கண்ணதாசன்
அவன் கவிஞன்

உங்களால் எல்லாம் ஒரு கவிஞனையோ அவன் முற்போக்கையோ தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தொலைந்து போங்கள், தமிழை வாழவிட்டுவிட்டு!

அன்புடன் புகாரி

No comments: