என் பெயரை நான் எழுதுகிறேன்

அவனவன் பெயரை அவனவன் முடிவு செய்வான் எப்படி எழுதுவதென்று.

அயல் ஊர் அயல் நாடு போன்ற பெயர்களை இயன்றவரை உச்சரிப்பு மேலோங்க எழுதுவோம்.

கிரந்தத்தைக் கட்டாயம் பயன்படுத்துவோம் என்று இங்கே யாரும் சத்தியாகிரகம் செய்யவில்லை


புஹாரியை புகாரி என்றே எழுதுகிறேன்

ஜார்ஜ் என்பதை சாருசு என்று எழுதுவது நிச்சயமாகச் சரியில்லை என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.

குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்று எழுதுவதில் ஏற்பில்லை.

சிறப்புப் பெயர்ச்சொற்களை எப்படி எழுதுவதென்பது என் தேர்வு.

நான் தமிழன், என் மொழியில் நான் எழுதுகிறேன். இதில் எவரின் தனித் தலையீட்டையும் விரும்புவதில்லை.

தமிழ்ச் சொல் எழுதும்போது நான் வேஷ்டி முஷ்டி என்று எழுதினால் நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னை வந்து ஓர் அதட்டலே போடலாம்

வேறு நிலைப்பாட்டோடு யார் வந்தாலும் நான் அன்பு பொங்க ஓர் அதட்டல் போடுவதைத் தவிர்ப்பதரிது

அன்புடன்
கவிஞர் புகாரி

No comments: