வாழ்க தமிழ்

வித்தகர் யாவரும்
கூடிடுவீர்
விண்ணிலும் தமிழை
ஏற்றிடுவீர்

முத்தமிழ் இன்றியோர்
வாழ்வேது
முரசுகள் ஒலித்தே
போற்றிடுவீர்

இரத்தமும் பீறிடும்
தமிழாக
முத்தமும் ஊறிடும்
தமிழ்பாட

பித்தமும் தெளிந்திடும்
தமிழ்பேச
பேய்களும் வணங்கிடும்
தமிழ்கேட்க

எத்தனைப் பொற்கரம்
தமிழோடு
இமயமும் அற்பமே
தமிழுக்கு

நித்திரை மறந்து
தமிழெடுப்போம்
நீலவான் எங்கிலும்
நட்டுவைப்போம்

கவிஞர் புகாரி

No comments: