நண்பர் வேந்தன் அரசு,
உங்களுக்கு
மலையாளம் எப்படி வந்தது என்பதில்
பெருங்குழப்பம் இருக்கிறது
எனக்கு விளக்க நேரமில்லை
என்றாலும் ஒரு சில சொற்களில்...
வடசொற்களை
அளவுக்கதிகமாக உட்கொண்டதால்...
மலையாளம் வந்தது
தமிழ் ஒரு 10% உட்கொண்டிருக்கும்.
அதையும் பின் விரட்டத் தொடங்கிவிட்டது
மலையாளம் அப்படியே
வடமொழியை ஏற்றது
இனியும் ஏற்கிறது
புதிதாகவும் சேர்க்கிறது
அதுமட்டுமல்ல
தமிழை செம்மையாய் உச்சரிக்காமல்
கொடுந்தமிழையே
எழுத்திலும் எழுதத் தொடங்கினார்கள்
அது ஒரு முக்கிய காரணம்
எழுத்து என்ன செய்யும்
சில்லறை விடயம்.
சொற்கள் கலப்பதே
பெரிய மாற்றம்
யானை போவது தெரியாத
கண்களுக்குத்தான்
எறும்பு போவது தெரியுமாம்
அப்படியான தொரு கண்கள்
உங்களுடையவை
வேந்தரே
இராசு இராசேந்திரரே
அன்புடன் புகாரி

No comments: