மீண்டும் ஹிந்தி திணிக்க வருகிறார்கள்

1. பாலிவுட் இல்லாவிட்டால் ஹிந்தி காலி. பாலிவுட்தான் ஹிந்தியை வளர்த்தெடுக்கிறது. ஹிந்தி இலக்கிய மொழியல்ல சினிமா மொழி!

2. ஹிந்தியில் வளமான இலக்கியங்கள் கிடையாது

3. குரங்குக் குட்டிகள் கொடியில் தொங்குவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டது (நன்றி கண்ணதாசன்)

4. ஹிந்தி கற்றுக்கொள்வது ஜலதோசத்துக்கு நல்ல மருந்து. ஹாங் ஹூங் என்று சலி சிந்துவதுபோலப் பேசிப்பேசி மூக்குத் துவாரத்தைச் சுத்தம் செய்கிறது ஹிந்தி.

5. ஹிந்தி தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்தியா 5000 வருடப் பாரம்பரியம் கொண்ட நாடு

6. ஹிந்தி பயின்றவர்களுக்கு பிறமொழி பயில்வது கடினம். அப்படியே ஹிந்திப்படம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

7. ஹிந்திமொழி அறிவு வளர்ச்சியைத் தடுக்கும். ஏனெனில் இந்தி அறிந்தவர்கள் வேறு எந்த மொழிக்காரர்களுடனும் ஹிந்தியில்தான் கடபுடா என்று ஓட்டுவார்கள். மற்றவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியாது என்பதெல்லாம் சுட்டுப்போட்டாலும் அவர்கள் புத்தியில் ஏறாது

8. ஹிந்தியில் கவிதை இலக்கியம் என்று வந்துவிட்டால் அது உருதுவையே கடன் வாங்கிக்கொள்கிறது. எது உருதுச் சொல் எது ஹிந்திச் சொல் என்று ஹிந்திக்காரர்களுக்கே சரியாகத் தெரியாது.

9. ஹிந்தி எழுத்துக்களின் மேல் கோடு இருப்பதால், தட்டச்சும்போது ஒரே கோடாய் போடமுடியாது. கோடுகள் சேராமல்தான் போடமுடியும். எனவே கணினிக்கு லாயக்கற்ற எழுத்துக்களை உடைய மொழி ஹிந்தி

10. ஹிந்தி அராபிய எண்களையே பயன்படுத்துகிறது.

No comments: