காதலும் வ.வெ.சு. அய்யரும்

காதல் என்றால் என்ன
...

காலஞ்சென்ற ஸ்ரீமான் வ.வெ.சு அய்யர் காதலுக்கு மிகச் சிறந்த விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்:

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்தும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது மற்ற யாரைப் பார்க்கும்போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமனிய விசயமானாலும், அவருடைய குரலில் விசேசமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தையைக் காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும்போது வாய் குளறுகிறது; நாக்குக் கொஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக்காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ,
அது தேவரகசியம் - மனிதரால் சொல்லமுடியாதது.

(கல்கியின் கட்டுரைத் தொடரிலிருந்து...)

No comments: