வினோதன்

கேட்போருக்கு
மௌனத்தால் பாட்டிசைப்பான்

பார்ப்போருக்கு
உருவமற்று நடனமாடுவான்

நுகர்வோருக்கு
வாசனையற்று அனுபவமாவான்

சுவைப்போருக்கு
ருசியற்று விருந்தாவான்

தொடுவோருக்கு
பரிசமற்று அணைப்பாவான்

பிரபஞ்சத்தின்
ஒரே ஒரு நாடகத்தில்
ஒரே ஒரு பாத்திரப் படைப்பு

1 comment:

சாந்தி said...

ம். அனுபவ சிந்தனை.



பிரபஞ்சத்தின்
ஒரே ஒரு நாடகத்தில்
ஒரே ஒரு பாத்திரப் படைப்பு

சிலநேரம் மனிதர் உருவில் வந்து ஆச்சர்யப்படுத்துவான்...




--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..