குறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்


பார்த்தேன் நான் அவளை
பதிலாகப்
பார்த்தாள் அவளும் என்னை
வெறுமனே
அவள் பார்த்தாலே
அந்தப் பார்வை
எனைக்
கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ
ஒரு படையையே
தன் விழிகளில் திரட்டி
என்னைப்
பார்த்துத் தொலைத்தாளே

*

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து



*

3 காமத்துப்பால் - 1 களவு இயல் - 109 தகையணங்குறுத்தல் - குறள் 1082

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

1 comment:

வாழ்க வளமுடன் அப்பண்ணா said...

அவள் பார்வை
கண்ணும் கண்ணும்
நோக்கிய மின் அலை
தாக்கம்
அப்படி தானிருக்கும்.

வாழ்க வளமுடன்