'அம்மா’ தான்
இலக்கியத்தைச்
செம்மையாய் வளர்க்கிறார்கள்
இன்றெல்லாம்

டாஸ்மாக்
இல்லையெனில்
இலக்கியமே இல்லை
எழுத்தாளர்களே இல்லை

தண்ணியில் கவிழாமல்
ஒரு வரிகூட
எழுதமுடியாதவர்களாய்
தமிழ்நாட்டின்
எழுத்தாளர்கள்
கவிஞர்கள்

போதைதான் 
எழுத்து

போதைதான் 
இலக்கியம்

ஒரு 
நூலைத் தொட்டால்
அதன் அட்டையிலேயே 
ஒட்டிக்கிடக்கும்
மதுவின் வாடை 
நாசிக் கோட்டையை
இடித்து முடிக்கிறது

போதை வந்து
புத்தி சொல்கிறது
போதையிலில்லாதவனோ
புரிந்துகொள்ள முடியாமல் 
திகைக்கிறான்

உலகுக்கு 
நல்ல கவிதை 
கிடைத்துவிட்டதாய்
புளகாங்கிதம் கொள்கிறார்கள்
இன்றைய 
உயர்மட்டப் படைப்பாளிகள்

அன்புடன் புகாரி

No comments: