ஒரு மதத்தை
உண்மையாய் நேசிக்கும்
ஓர் உள்ளம்
எல்லா மதங்களையும்
தன் மதத்தைப் போலவே
நேசிக்கும்

அதுதான்
ஆன்மிகம் நிறைந்த
பொன்மனம்

அப்படியான
ஆன்மிக மனமற்றவர்கள்
எம்மதத்தில் இருந்தாலும்
அங்கே அவர்கள்
அரசியல் செய்துகொண்டுதான்
இருப்பார்கள்

மதங்களுக்குள்
அரசியல் பெருகப் பெருக
வக்கிரர்கள் பிறப்பார்கள்
வெறியர்கள் வளர்வார்கள்
தீவிரவாதிகள் செழிப்பார்கள்
மனிதர்கள் சாவார்கள்

No comments: