அமெரிக்காவில் கனடாவில் இன்னும் ஐரோப்ப நாடுகளில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க அங்கு வாழும் குடும்பப் பெண்கள் பணிக்கும் சென்றுவிட்டு சனி ஞாயிறுகளில் பெரிதும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் போதிய வசதிகளைச் செய்துகொடுத்தால், புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் அத்தனைத் தமிழ்ப் பிள்ளைகளையும் அழகாகத் தமிழ் பேச வைத்துவிடுவார்கள்.

அடுத்த தலைமுறை தமிழில் பேசுமா? அப்படியொரு அச்சம் எவருக்கும் இல்லையா?

ஊரில் தமிழ்ப்பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்கள். ஆனால் எழுதப்படைக்கத் தெரியவில்லை.

இங்கே கனடாவில் இளையவர்கள் பேசுவதும் இல்லை.

தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவேண்டும் என்பதே இக்காலத்தின் மிகப் பெரிய தேவை, கட்டாயம், அடிப்படை, தமிழுக்கான வாழ்க்கை.

No comments: