ஆயிரம்தான்
அவளுக்குச்
சொக்கத் தங்க
மனதிருந்தாலும்

ஆயிரம்தான்
அவளுக்கு
அமுத சுரபி
அன்பிருந்தாலும்

ஆயிரம்தான்
அவளுக்கு
ஆகாய உயர்
அறிவிருந்தாலும்

எதையும்
பார்ப்பதில்லை
பாழாய்ப்போன
இந்த பூமி

அழகை மட்டுமே
பார்க்கிறது

அதை
அபகரிக்கவும்
பார்க்கிறது

ஊரான் தோப்பு
மாங்காயைக்
கையில் கற்களுடன்
நின்று பார்க்கும்
பள்ளி செல்லாச்
சிறுவனைப் போல

பார்ப்பதுதான்
நாகரிகமா

பறிப்பதுதான்
ஆணினமா

அன்புட்ன் புகாரி

No comments: