கனடா விருது வாங்கிய கவிஞர் அதே நாளில் தண்ணியால் மாண்டார்.
வேணுவனம் ஓர் கட்டுரை எழுதி மூத்த எழுத்தாளர்களே இளைய எழுத்தாளர்களுக்கு ஊத்திக்கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்
மூத்தவர் செய்யும் தவறைக் கண்ட இளைய தலைமுறை எழுத்தாளர்கள் கெட்டொழிவார்கள் என்றார்.
ஆனால் ஒரு முக்கியமான விடயத்தை மறந்துவிட்டார்.
இப்படி குடித்தே மாண்ட கவிஞர்களின் கவிதைகளைக் கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். எல்லாம் தோல்வி மயம். பித்துநிலை. தனிமையின் துயரம். தாளாத விரக்தி. அத்தனையையும் இளைய தலைமுறை வாசகர்கள் தலையில் ஏற்றுகிறார்கள்.
வாசித்த மாத்திரம் ஓடிச் சென்று தண்ணியடிக்கலாம், தற்கொலை செய்யலாம். வேறு எந்த முன்னேற்ற வழிகளுக்கும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் நம்பிக்கைக் கவிதைகளை இவர்கள் படைப்பதே இல்லை.
இப்படி அழியும் சமுதாயத்தை உலகைப் படைக்கும் கவிதைகளுக்கு கனடா விருது வழங்குகிறது என்றால் அதன் அறியாமையை நினைத்துக் கலங்காமல் இருக்க முடியவில்லை
தான் கெட்டொழிந்தாலும் நம் எழுத்துக்கள் எவரையும் கெட்டொழிக்ககூடாது என்ற அக்கறையில்லாத எழுத்தாளன் எழுத்தாளனா?

No comments: