எளிமையாகச் சொல்வதென்றால் நோன்பு என்பது சூரியன் எழும்போது துவங்கும் விழும்போது முடிவடையும்.
அதிகாலையிலேயே காலை உணவை உட்கொண்டுவிட்டு மதிய உணவை உண்ணாமல் மீண்டும் இரவு உணவை உண்ண வேண்டும்.
இதில் சற்றே சிரமமானது என்னவென்றால் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அப்படியே கட்டுப்பாட்டோடு நோன்பு இருக்க வேண்டும்.
இப்படியாக ரமதான் மாதம் முழுவதும் முப்பது தினங்களுக்கு நோன்பு நோற்க வேண்டும்.
சில நாடுகளில் சில மாதங்களில் 9 மணி நேரங்கள் மட்டுமே நோன்பு இருக்க வேண்டி வரும். ஏனெனில் அங்கே அம்மாதம் பகல் பொழுது குறைவு.
சில நாடுகளில் சில மாதங்களில் 22 மணி நேரம்கூட நோன்பு இருக்க வேண்டி வரும் ஏனேனில் அப்போது அங்கே பகல் பொழுது மிக அதிகம்.
ஆனால் சில நாடுகளில் குறிப்பாக கனடாவின் வட எல்லைகளில் சூரியனே எழாமல் சில நாட்கள் செல்லும். சில நாட்களில் சூரியன் விழாமலே நிரந்தரமாய் நிற்கும்.
அங்கெல்லாம் எப்போது நோன்பு வைப்பார்கள். சவுதி அரேபியாவில் வைப்பதுபோல் சுமார் 14 மணிநேரம் நோன்பை எப்படி வைப்பது?
அதற்கு இருவகையான தீர்வுகளை யூதர்கள் கொண்டு வந்தார்கள். இஸ்லாமியர்களும் அதுபோன்ற தீர்வுகளை ஆலோசித்தார்கள்.
1. அருகில் உள்ள நாட்டின் நோன்பு நேரத்தையே தங்கள் நாட்டின் நோன்பு நேரமாக்கிக் கொள்வது
2. மெக்காவின் நோன்பு நேரத்தையே தங்கள் நாட்டின் நோன்பு நேரமாக்கிக் கொள்வது

No comments: