#மனிதன் மதம் இறைவன்

கிழக்கில் நின்றாலும்
மேற்கில் நின்றாலும்
வடக்கில் நின்றாலும்
தெற்கில் நின்றாலும்
திசையறியா திசைமாறி
திரும்பியே நின்றாலும்
சூரியன் ஒன்றுதான்
பலவல்ல

எத்தனை எத்தனை
மதங்கள் மாறினாலும்
இறைவன் மாறுவானோ

மதம் மாறினால்
செல்லும் மார்க்கம்
மாறலாம்

பேரண்டத்தில்
இறைவன் ஒருவனே என்றால்
அவன் எப்படித்தான்
மாறுவான்

செல்லும் வழியைச்
செம்மையெனத் தேர்ந்து சேர்வதும்
மனதிற்கு மையமாய் மாற்றுவதும்
ஏற்ற வாழ்விற்கு ஏற்றதாய் ஏற்பதுமே
மதமாற்றம் வேறில்லை

எல்லா நதிகளும்
கடலுக்கே

எல்லா துளிகளும்
நிலத்திற்கே

No comments: