ஆம்...
மரணத்தின்மீது
எவருக்குமே பயமில்லை

ஏன்
பயப்பட வேண்டும்

மரணமென்ன
கொடுமையானதா

பரிசுத்தமான
விடுதலையல்லவா

இருக்கும்போது
அது
வந்திருக்கப்போவதில்லை
இறந்தபோது
நாம்
இருக்கவே போவதில்லை

பிறகு ஏன்
பயப்படவேண்டும்

ஆனால்...

பிரியத்தில்
பாசத்தில்
நெருக்கத்தில்
உயிரில்
இருக்கும் உயிர்களைப்
பிரியப்போகிறோமா
என்று
நினைத்துவிட்டால்

என்னையே நான்
பிரிந்துவிடுவேனோ
என்று
அஞ்சிவிட்டால்

மரணபயம்
கன்னங் கருஞ்சிறகு
பூட்டிக்கொண்டு
காய்த்து வெடித்தக்
கூர்நகக் கால்களோடு
பறந்து வந்து
நெற்றிப் பொட்டில்
அமர்ந்து விடுகிறது

கண்கள்
கண்ணீர்க் காட்டாற்றில்
குதித்தோடத் தொடங்கிவிடுகின்றன

அன்புடன் புகாரி

No comments: