வன்முறை வகைகள்
மூன்று

செயல் வன்முறை
சொல் வன்முறை
எண்ண வன்முறை

இவற்றுள்
எண்ண வன்முறையே
எண்ணிமுடியா
கொடூரத்தின் உச்சம்

செயல்வன்முறையைத்
தடுத்துவிடலாம்

ஏனெனில்
அது நிகழ்வதைக்
கண்ணறியும் என்பதால்

சொல்வன்முறையை
நிறுத்திவிடலாம்

ஏனெனில்
அது உதிர்வதைச்
செவியறியும் என்பதலால்

எண்ண வன்முறையே
அனைத்து
வன்முறைகளுக்குமான
மூலம்
அது
தன்னை
முற்றாக மறைத்துக்கொண்டு
மூட மூர்க்க உலகைத்
தவறிழைக்கத் தூண்டுவதிலேயே
முனைப்பாய் இருக்கும்

எண்ண வன்முறையாளனின்
நாவினிப்புச்
சாதுர்யங்களில் சரிந்து
தன்னை இழக்கும் மனிதனின்
அறியாமை
அடியோடு ஒழிய
மகத்துவம் வாய்ந்த
ஒரே மருந்து
ஈர இள நெஞ்சில்
அறம் பதிப்பதேயன்றி
வேறில்லை

அம்மா தருவாள்
ஆசான் தருவான்
ஆண்டவன் தருவான்

மானுடம்
மானுடமாய் வாழ
அழுத்தமாய் ஆழமாய்
அழிந்துபோக திருத்தமாய்
அறம் பயில்வாய்
அன்பே


No comments: