ஊழல்
மிதமிஞ்சிய நாட்டில்
எவருக்கேனும்
சுதந்திரம் இருக்க
வழியுண்டா?

எல்லோரும்
எவ்வகையிலேனும்
தண்டல் கட்டித்தான்
நடக்க
உட்கார
எழுந்திருக்க
முடியும்

கூடுதல் அவலமாய்
சிலரோ
தங்களுக்குத்
தாராள
ஏராள
சுதந்திரம் இருப்பதான
கற்பனையில்
பொய்ச் சிறகு பூட்டி
பொட்டல் வெளியில்
புழுதிகளாய்ப் பறக்கிறார்கள்

ஜனநாயக நாட்டில்
சுகமாய் வாழ்வதாக
பித்துக்குளிகளைப் போல
பினாத்துகிறார்கள்

அன்புடன் புகாரி

No comments: