எம்மதமும்
அம்மதத்தினரால்
தெளிவாகப்
புரிந்துகொள்ளப் படாததாய்
இருக்கிறது

எம்மதமும்
அடுத்த மதத்தினரால்
புரிந்துகொள்ளவே
முயற்சி செய்யக்கூடாது
என்கிற
எண்ணங்களைக்
கொண்டிருக்கிறது

எம்மதமும்
பகுத்தறிவாளர்கள்
என்று
சொல்லிக்கொள்பவர்களால்
தவறான
பொருள் கூறப்படுவதாய்
இருக்கிறது.

இவை
அத்தனைக்குமே
காரணம்
மனிதர்களின்
அறியாமைகளும்
விகாரங்களும்தானே
அன்றி வேறில்லை

அன்புடன் புகாரி
20171201

No comments: