நம் இந்திய தேசத்திற்கு
ஆங்கிலமே
பொது மொழியெனப்
போதும் போதும்

நடுவண் அரசு
இந்திக்காரனோடு
இந்தியில் உரையாடட்டும்
தமிழனோடு
தமிழில் உரையாடட்டும்
தெலுங்கனோடு
தெலுங்கில்  உரையாடட்டம்

இப்படியே
அத்தனைத்
தாய்மொழியினரோடும்
அவரவர் தாய்மொழியில்
உரையாடட்டும்

தாய் மொழி அறியாதான்
ஆங்கிலத்தில் உரையாடட்டும்

ஆங்கிலமும்
தாய்மொழிகளும்தானே
இந்த தேசத்தின் கல்விமொழிகள்

அதுவன்றி
இந்தியும் ஆட்சிமொழி என்று
சில குரங்குக் கூட்டங்கள்
திணவெடுக்கும்போதுதான்
இந்த தேசத்தின்
பொன்னான தாய்மொழிகள்
நசுக்கப்படுகின்றன
ரத்த ஆறுகள் ஓடுகின்றன

இந்தியை
நாடாளுமன்றத்திலிருந்து
முற்று முழுதாக
ஒழித்துக் கட்ட வேண்டும்

தாய்நாட்டில்
தாய் மொழிகள்தான்
தாய்கள்

எந்தத் தாயும்
கண்ணீர் சிந்துதல் கூடாது

உன்
வீடாளும் மொழியே
நாடாளும் மொழியென்று
வீம்படித்தால்
வெற்றுச் சாம்பலாவாய்
எச்சரிக்கை

அன்புடன் புகாரி
20171217

No comments: