நான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை.

அது அவரவர் விருப்பம் நம்பிக்கை.

அதனால் யாருக்கும் எக்கேடும் ஆவதாய் நான் உணரவில்லை.

இறைவன் ஒருவன் தானா என்பதுதான் என் கேள்வி.

அந்த ஒருவனை எப்படி வேண்டுமாலும் யார் வேண்டுமானாலும் வர்ணனை வரையறை செய்து கொள்ளட்டும், வணங்கட்டும், நம்பிக்கையில் சிறந்து விளங்கட்டும்.

அதனால் ஏதும் கேடில்லை.

இறைவன் பல என்றதும் உலக அமைதியில் கீறல் விழுகிறதோ என்று ஐயுறுகிறேன்.

உன்னைப் படைத்த கடவுள்தான் என்னையும் படைத்தான் என்றால் அதில் ஓர் இணக்கத்திற்கான நூல் தென்படவில்லையா?

அதுதானே உண்மை என்றும் தெளிவு பெற முடியவில்லையா?

நான் இணக்கம்தேடிப் போராடும் எளிய வெண்புறா!

அன்புடன் புகாரி

No comments: